பதிப்பாளரின் குறிப்புகள்

இந்த நூலை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தனது நூலை வெளியிட எங்களுக்கு அனுமதி வழங்கிய, சன்மய் சயாதவ் என்றும் அழைக்கப்படும் சயாதவ் ஜனகாபிவம்சர் அவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ம்யான்மரில் வசிக்கும் சயாதவ் ஜனகாபவிம்சர், மறைந்த மரியாதைக்குரிய மஹாசி சயாதவினின் தலைசிறந்த சீடர்களில் ஒருவர். ததாகத தியான மையத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் சிறப்புத் தியான முகாம் நடைபெறும். அவ்வாறு 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் சயாதவ் அவர்களை நம் மையத்திற்கு வருகை தந்து தம்ம உரை ஆற்ற அழைத்தோம். 88 வயதில், சயாதவ் விபஸ்ஸனா பயிற்சி குறித்து ஒரு சுருக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய உரையை வழங்கினார். சயாதவ் மையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவர் தனது "Practical Insight Meditation" புத்தகத்தின் சில பிரதிகளை எங்களுக்கு வழங்கியிருந்தார். நாங்கள் அதை மீண்டும் அச்சிட அவரது அனுமதியைக் கோரினோம்.

நூலை வெளியிடத் தயாராகும் போது, விபஸ்ஸனா தியானம் குறித்த மேலும் இரண்டு புத்தகங்கள் சயாதவிடம் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்: "விபஸ்ஸனா: நுண்ணறிவு குறித்த விரிவுரைகள்" மற்றும் "விபஸ்ஸனா தியானப் படிப்பு" ஆகிய இரண்டு புத்தகங்களும் இருந்தன. மூன்று புத்தகங்களையும் படித்த பிறகு, ஒவ்வொரு புத்தகமும் விபஸ்ஸனா தியானப் பயிற்சி தொடர்பான சில முக்கியமான போதனைகளைத் தனித்துவமாகக் கொண்டிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்த மூன்று புத்தகங்களிலிருந்தும் அனைத்து முக்கிய போதனைகளையும் ஒன்றாகத் தொகுத்து, சயாதவால் கற்பிக்கப்பட்ட விபஸ்ஸனா தியானத்தின் முழுமையான பதிப்பைப் பெறலாம் என்று நாங்கள் நினைத்தோம். பின்னர் நாங்கள் எங்கள் திட்டத்தை முன்னெடுத்தோம்.

எங்கள் பெரும் மகிழ்ச்சிக்கு, இந்தப் புத்தகம் இப்போது நிறைவடைந்துள்ளது.

வாசகர்கள் இந்தப் புத்தகத்தில் பின்வரும் தலைப்புகளைக் காணலாம்:

  • நுண்ணறிவு தியானம் என்றால் என்ன.

  • நுண்ணறிவு தியானம், புத்தர் தனது முதல் பிரசங்கத்திலும் மற்ற பல இடங்களிலும் போதித்த நான்கு நன்னெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது எப்படி. சுருக்கமாகச் சொன்னால், புத்தரின் அனைத்து போதனைகளும் நான்கு நன்னெறிக் கருத்துக்களைப் பற்றியே ஆகும்.

  • சதிபட்டான சூத்திரத்தில் புத்தர் போதித்தபடி, ஞானப் பயிற்சியைப் பயிற்சி செய்வதால் நாம் பெறக்கூடிய நன்மைகள்.

  • அடிப்படையில் அமர்வது, நடப்பது மற்றும் அனைத்து அன்றாட நடவடிக்கைகளில் தியானம் செய்வதைக் கொண்ட ஞானப் பயிற்சியை எவ்வாறு செய்வது.

  • விபஸ்ஸனா ஞானத்தின் பதின்மூன்று நிலைகள் மற்றும் மார்க்க-பலன் அறிவு மற்றும் மறுஆய்வு அறிவுடன் சுத்திகரிப்பின் ஏழு நிலைகள்.

உங்கள் பயிற்சிக்கு இந்நூல் உதவியாக இருந்தால், மரியாதைக்குரிய சன்மய் சயாத, அவருடைய போதனைகளை ஒரு புத்தகமாகத் தொகுக்கும் எங்கள் முயற்சியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவார். அவரது மகிழ்சி உண்மையில் எங்களுக்கு மிகுந்த பெருமையாகும்.

அன்புடன்,

ததாகத தியான மையம், சன் ஹோசே, கலிபோர்னியா, USA